Wednesday, August 20, 2008

நோன்பின் மாண்பு

வருடத்தில் ஒருமுறைவரும்நோன்பு எனும் கடமை,
முஸ்லீம்களின் வாழ்வினில் ஒருமகத்தான கடமை,
பசி,பட்டிணி என்பதறியாத பணபலம் படைத்தவர்களுக்கும்,
பசி என்றால் என்ன என்பதை உணர்த்தும் நோன்பு,
காலைமுதல் மாலைவரை பசித்திருந்து இறைவனுக்காக நாம் சொல்லும்நன்றிதான் நோன்பு,
இப்பூவுலகத்தை படைத்து பராமறித்து ,அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் அதிபதிக்கு அவன் தொண்டர்கள்செய்யும் நன்றிதான் நோன்பு,
பணபலம் தன்னிடம் பரந்து கிடந்தாலும்,பைசாகூட தர்மம் செய்ய மனம் இல்லாத,பகட்டான இவ்வுலகை நேசிக்கும்பணம் படைத்தவர்களுக்கும்,
ஏழைஎழியவர்களுக்கு உதவ மனம் தரும் மாண்பானமாதம் தான் நோன்பு,
இஸ்லாத்தின் ஜந்து முக்கிய கடமைகளில் -ஒன்றானதுதான்நோன்பு,
ஜம்புலன்களையும் ஆண்டவனுக்காக தன்னால் அடக்கமுடியும்,என்றுகூறும்
மகத்தான மாதமேநோன்புமாதம்,
நல்ல உணவுகளை ருசித்திராத எழைஎழியமக்களுக்கும் -
வசதிபடைத்தவர்கள் வாரி வழங்கி நன்மைகளைதேடிக்கொள்ளும்மாதம்தான் இப்புனிதரமளான் மாதம்,
முஸ்லீம் மக்களுக்கு ஜகாத் எனும் ஏழை வரியை கண்டிபபாக ஏழைகளுக்கு
வழங்கசொல்லும் மாதம் தான் இப்புனித நோன்புமாதம்,
இந்த பூலோகமக்கள் அனைவருக்கும் பொதுவான புகழ்மிக்க -
சங்கை மிக்க திருக்குரான் இறைவனால் அருளப்பட்டதும் இப்புனிதமாதத்தில்தான்,
இவ்வளவு நன்மைகளும் ஒருங்கேகொண்ட மாதம்தான் நோன்பு மாதம்,
இதனால் தான் என்னவோ? -
நபிகள்நாயகத்தின் காலத்தில் வாழ்ந்த சஹாபா தோழர்கள் கூறினார்களாம்
நீங்கள் உத்தரவிட்டால் நாங்கள் ஆண்டுமுழுவதும் நோன்பு வைக்கிறோம்,
என்றார்களாம், அதற்கு
நபிகள் சொன்னார்களாம், வேண்டாம்,
இஸ்லாம் சொன்னதையேநீங்கள்செய்யுங்கள்,
பிறரையும் செய்யசொல்லுங்கள்,
இறைவன் உங்களை துன்புறுத்த விரும்பவில்லை,
நீங்கள் பசித்திருப்பதினால் தாகித்திருப்பதினால் இறைவனுக்கு,எந்ததேவையும் இல்லை,
இந்தநோன்பு மாததில் நீங்கள்செய்யும் நற்செயல்களும்,நன்மையைஏவுவது
தீமைகளை தடுப்பதும்,வணக்க வழிபாடு களில் ஈடுபடுவது -
மனதால் கூட பிறருக்கு துன்பம் விழைவிக்காத மனம் தரும் மாதம் தான் நோன்பு மாதம்,
இப்புனிதமிக்க ரமளானை வரவேற்போம்,
அனைவரும் நோன்புபிடிபோம் ,
நல்லதையே நினைப்போம் ,நல்லதேயேசெய்வோம், நபியின்வழிநடப்போம்,
இறைவன் நாடினால்.

Saturday, August 16, 2008

சுதந்திரதாகம்

நம் இந்திய திருநாடு தனது 61 வதுசுதந்திரதினத்தினைகொண்டாடுகிறது,நாம் அனைவரும் கொண்டாடிமகிழ்கின்றோம், இந்நாளில் நாம் எல்லோரும் பெற்றசுதந்திரத்தை பேணிகாக்கவேண்டும்,எல்லோருக்கும் எல்லாமும்கிடைக்கவேண்டும்,கல்லாமை இல்லாதுசெய்திடவேண்டும்,வசதிபடைத்தவன்வறியவனுக்கு உதவ வேண்டும்,ஜாதிமதபேதமில்லாத துணிவுமிக்க அரசு மலரவேண்டும்,லஞ்சம்வாங்காத அதிகாரிகள் வரவேண்டும்,லஞ்சம்வாங்கினால்வீட்டுக்கு அனுப்பவேண்டும்,அரசுஅதிகாரிகள் உண்மையாக நேர்மையாக மக்களுக்கு உழைக்கவேண்டும்,நாட்டுமக்கள்நல்லதையைநினைக்கவேண்டும்,நம்பிரதமர்குண்டுதுளைக்காதமேடையிலும்,நம்முதல்வர்குண்டுதுளைக்காதஜீப்பிலும்,வந்து உரையாற்றுவதும்,ராணுவ அணிவகுப்பை பார்வையிடுவதும்,இதுதான் சுதந்திரமா?இதுதான் மஹாத்மாகண்ட சுதந்திர இந்தியாவா?எப்போதுதனிமையில் இரவில் ஒரு பெண்வீதியில் எந்த பயமும் இன்றி உலாவருகிறாளோ; அப்போதுதான் உணமையான சுதந்திரம் கிடைத்துவிட்டது,என்று காந்திமஹான்கண்டகனவுபலிக்குமா?இங்குநாம் பிரதமருக்கும்,முதல்வருகும்,ஜந்து அடுக்கு பாதுகாப்புபோடுகிறோம்,ஏனிந்த நிலைசற்றுசிந்திக்ககடைமைபட்டுள்ளோம்,உண்மையான சுதந்திரத்தை அடைய இத்தகைய நிலைமறைய நாம் அனைவரும் முயலவேண்டும்,அரசுஅதிகாரிகள்ஜாதிமதபேதமில்லாமல் பணியாற்றவேண்டும்,ஊடகங்கள் மக்களிடம் செய்திகளைகொண்டுசேர்ப்பதில்முக்கியபங்குவகிக்கின்றன, இவை விளம்பறத்துக்காகவும்,லாபநோக்கோடுமில்லாமல் ஜாதிமத உணர்வை தூண்டாமல், வேறுபாடுஇன்றி செய்திகளைவெளியிடவேண்டும்,உண்மையா?இல்லையா என்ற செய்திகளை தவிர்த்து உண்மையாக இருந்தால் மட்டுமேவெளியிடவேண்டும்,காவல் துறைகளும் தன்கடைமையை ஜாதிமதவேறுபாடுகளை களைந்து நேர்மையாகசெயல்படவேண்டும்,அரசியல்வாதிகள் சுயநலமில்லாமல் மக்களுக்காக பாடுபடவேண்டும்,மதுஎனும் அரக்கனை நாட்டை விட்டே விரட்டவேண்டும்,பிறர்பொருள்மீது ஆவல்கொள்ளாதமனம்வேண்டும்,இச்சிந்தனைகளோடு அனைவரும் உழைத்தால் ,காந்திமஹான் கண்ட கனவை நனவாக்கலாம்;முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கண்ட வல்லரசான பாரதத்தை காணும் தூரம் வெகுதொலைவில் இல்லை,இது இந்த நல்லூர்வாசியின் (சின்ன)ஆசையும்கூட;வாழ்க இந்தியா வளர்க இந்திய மக்கள்.